சிவஞான சித்தியார் 323வது பாடல்
ஈசனுக்கு அன்பு இல்லார் அடியவர்க்கு அன்பு இல்லாதவராக இருப்பர். அவர்களின் நட்பை நீக்கி,சிவனடியாரின் கூட்டத்தை நாடி திருத்தொண்டு செய்து அவர்களோடு மகிழ்ந்து இருப்பாயாக.
உயிர் தன்னை அறியும் பொருட்டு,உயிர்க்கு சிவபெருமான் தோற்றத்தை தந்து, திருவெண்ணீறும்,கண்டிகையும்,திருஐந்தெழுத்தும் வழங்கி சிவன் உருவம் போன்றே தோன்றும்படி செய்வார். அத்திருவேடம் தாங்கிவரும் அன்பர் தன் இதயத்தில் அரனைக்கூடும் கொள்கையினால் சிவமேயாய் தோன்றுவர்,அவர்களை தொழுது உங்கள் பாசவினைப்பிடிப்பை போக்கி கொள்ளுங்கள்.
பரபிரம்மமாகவும்,
பரசிவனாகவும், பரஞானம் இவர் என்றும் ,ஞான குருவை வணங்க,இறைவன் மிக மகிழ்ந்து அந்த ஞானாசிரியனின் வழி தொட்டும்,நினைத்தும்,பார்த்தும் ஆகிய வழிகளில் நம்மை சிறப்பு செய்து சிவனடியை வழங்குவார்.
சிவஞான சித்தியார் தொகுப்பு நிறைவடைந்தது.
ஈசனுக்கு அன்பு இல்லார் அடியவர்க்கு அன்பு இல்லாதவராக இருப்பர். அவர்களின் நட்பை நீக்கி,சிவனடியாரின் கூட்டத்தை நாடி திருத்தொண்டு செய்து அவர்களோடு மகிழ்ந்து இருப்பாயாக.
சிவஞான சித்தியார் 324வது பாடல்
உயிர் தன்னை அறியும் பொருட்டு,உயிர்க்கு சிவபெருமான் தோற்றத்தை தந்து, திருவெண்ணீறும்,கண்டிகையும்,திருஐந்தெழுத்தும் வழங்கி சிவன் உருவம் போன்றே தோன்றும்படி செய்வார். அத்திருவேடம் தாங்கிவரும் அன்பர் தன் இதயத்தில் அரனைக்கூடும் கொள்கையினால் சிவமேயாய் தோன்றுவர்,அவர்களை தொழுது உங்கள் பாசவினைப்பிடிப்பை போக்கி கொள்ளுங்கள்.
கருத்து:
திருநாவுக்கரச நாயனாரை தொழுத அப்பூதிஅடிகள் நாயனாராக வீற்றிருப்பதை எண்ணுக. தன் அடியாரை கூடும் அன்பர்க்கு பாசவேர்தனை நீக்கி வீடுபேறு நல்குவார் நம் தந்தை சிவபெருமான்.
சிவஞான சித்தியார் 325 வது பாடல்
திருக்கோயிலில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திருமேனி தன்னை சிவமாகவே பூரித்து வழிபடுவோர்க்கு இறைவன் லிங்கத்திடையே தோன்றி அருள் செய்வார்.
இறைவனை நினைந்து பாடும் அன்பர்க்கு அவர்கள் பாடும் மந்திரத்தின் வழி அருள் செய்வார்.
எங்கும் நிறைந்த இறைவன் தன்னுள்ளேயும் இருக்கிறான் என்று உணர்ந்து வழிபடும் அருவ வழிபாடு உடையவர்க்கு விறகிடை தீ போல நின்று அருள்வார்.
மெய் அன்பு மீதூரந்த அன்பு நிலையில் மேம்பட்ட அன்பர்க்கு பசு பால் சொரிவது போல இறைவன்,ஞானியர்க்கு முன் தோன்றி அருள் செய்வார்.
இவை நான்கு முறையே சரியை,கிரியை,யோகம்ஞானம் ஆகியவற்றில் அடங்கும்.
இவை நான்கு முறையே சரியை,கிரியை,யோகம்ஞானம் ஆகியவற்றில் அடங்கும்.
சிவஞான சித்தியார் 328வது பாடல்
பரபிரம்மமாகவும்,
பரசிவனாகவும், பரஞானம் இவர் என்றும் ,ஞான குருவை வணங்க,இறைவன் மிக மகிழ்ந்து அந்த ஞானாசிரியனின் வழி தொட்டும்,நினைத்தும்,பார்த்தும் ஆகிய வழிகளில் நம்மை சிறப்பு செய்து சிவனடியை வழங்குவார்.
சிவஞான சித்தியார் தொகுப்பு நிறைவடைந்தது.